ஜெபவேளை எமக்கானந்தம் Jeba Velai Emakanantham Christian Song Lyrics
Jeba Velai Emakkanantham Lyrics in Tamil
ஜெபவேளை எமக்கானந்தம்
என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை
ஜெபம் எங்கள் ஜெயமே
1. இருள் சூழ்ந்த வனம் போன்ற இருண்ட கெத்செமனேயில்
இறுதி வேளையில் ஜெபித்தீர்
இரத்த வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவோ
அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா – இந்த ஜெப
2. மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து
உம் மகிமையை அளித்தீரையா
அன்று போல உம் தரிசனம் எமக்கருளும்
எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா – இந்த ஜெப
3. சரீரமோ பெலவீனம் ஆவியே உயிர்ப்பிக்கும்
சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
அந்த சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே
நல்ல அருள் ஆவி வரம் தாருமே – இந்த ஜெப
4. ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட
ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
பக்தன் மோசே போல் ஜெயம் பெற
ஜெபித்திடவே நித்தியபரனே கிருபை தாருமே – இந்த ஜெப
5. சிறைச்சாலை அடைபட்ட சீஷனை விடுவிக்க
சபையாரும் ஜெபித்தனரே
அன்று பேதுரு வெளிவந்த அதிசயம்போல் பதில்
அளித்தெங்கள் ஜெபங்கேளும் – இந்த ஜெப
6. உபவாச ஜெபமூலம் அகாஸ்வேரு ராஜனின்
உளமதைத் திருப்பினாளோ
எஸ்தர் ராணி தன் ஜெபங்கேட்டு தயவடைந்தாள் என்றும்
எமக்குந்தான் தயை தாருமே – இந்த ஜெப
7. உயர் கர்மேல் மலை மீது ஜெபித்திடும் எலியா போல்
துயருற்ற மகள் அன்னாள் போல்
தாசன் தானியேல் எனும் பக்தர் பலர்
ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே – இந்த ஜெப
8. நினையாத நேரத்தில் திருடன் போல் வருகிறேன்
நிதம் நீங்கள் விழித்திருங்கள்
என்று போதனை அளித்தீரே அதைநம்பியே - வந்தோம்
எமக்குந்தன் பெலன் தாருமே – இந்த ஜெப
0 Comments