துதிக்குப் பாத்திரரே தூய ஆவியே - (2)
ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே - (2)
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
1. இரவொன்று வந்து பகலென விடிவது
இறைவா உம் அற்புதமே
உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது
தேவா உம் சித்தமே - (2)
இருளினை நீங்கும் வெளிச்சமும் நீரே
இணையில்லா பேரொலியே
இரக்கத்தை தேடி ஜெபித்திடுவோர்க்கு
குறைவில்லா உம் கிருபையே
குறைவில்லா உம் கிருபையே
அதிகாலையில் தினம் தேடிநாள் உம்மை கண்டடைவார்கள் தேவா2. கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க்கெல்லாம்
கசப்பும் இனிப்பாகுமே
கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால்
கவலைகள் பரந்தோடுமே - (2)
காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால்
கேட்பது ஜெயமாகுமே
வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால்
வல்லமை உனை சூழுமே
வல்லமை உனை சூழுமே
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா3. நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு
சத்திய வேத வார்த்தையை கேட்டு
சாட்சியாய் நடமாடு - (2)
நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின்
அன்பினில் உறவாடு
நிரந்தர சொந்தம் இயேசுவை நாடி
நன்மையால் முடிசூடு - நீ
நன்மையால் முடிசூடு
அதிகாலையில் தினம் தேடிநாள்
உம்மை கண்டடைவார்கள் தேவா
0 Comments